கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு வெற்றிமுகம் - கோவையில் உற்சாகக் கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணி வகித்து வருவதை, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.


கோவை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

இதனை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சாய் சாதிக், ராம்கி உள்ளிட்டோர், சாலையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...