கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு வெற்றிமுகம் - கோவையில் உற்சாகக் கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணி வகித்து வருவதை, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.


கோவை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

இதனை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சாய் சாதிக், ராம்கி உள்ளிட்டோர், சாலையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...