திருப்பூரில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

பள்ளிக்கல்வித்துறையின் சர்வர் பிரச்னை காரணமாக திருப்பூரில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


திருப்பூர்: சர்வர் பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதற்காக மாணவ மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாககாத்திருந்த மாணவ-மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு மதியத்திற்கு மேல் வழங்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...