சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் 3ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 93.12 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலம் தேர்ச்சி விழுக்காட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.

இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில், தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகளின் தேர்ச்சியைப் பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர் பற்றிய விவரங்களை வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...