சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் 3ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 93.12 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலம் தேர்ச்சி விழுக்காட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.

இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில், தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகளின் தேர்ச்சியைப் பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர் பற்றிய விவரங்களை வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...