சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் 3ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 93.12 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலம் தேர்ச்சி விழுக்காட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.

இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில், தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகளின் தேர்ச்சியைப் பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர் பற்றிய விவரங்களை வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...