சூலூர் அருகே பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்டம் - ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் பங்கேற்று பாரம்பரிய நடனமாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


கோவை: சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா கடந்த மே 9ஆம் தேதி தொடங்கி, சக்தி கலசம் எடுத்தல், மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வு, விளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகளோடு நடைபெற்று வருகிறது.

இதையொட்டி,பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 200 பேர் பங்கேற்ற கர்ணன் கலைக்குழுவின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையில் ஒன்றான கும்மி ஆட்டத்தின் மூலமாக மாரியம்மனை அழைத்து வழிபாடு செய்யும் வகையில், அம்மன் பாடல்களை கும்மிப்பாடலாக பாடி கைகளைத் தட்டி கும்மியடித்து அவர்கள் ஆடினர். குழந்தைகளே கும்மி பாடல்களை அழகு கொங்கு தமிழில் பாடி அம்மனை அழைத்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



ஒரே சீருடையில் கும்மி பாடலுக்கு ஏற்ப, கைகளை தட்டி கும்மியாடி பெண்கள், குழந்தைகள் கும்மி ஆட்டத்தை சிறப்பித்தனர்.



பவளக்கொடி கும்மி ஆட்ட ஆசிரியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கும்மி ஆட்டத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...