கோவையில் மழையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து!

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் கனமழை காரணமாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் திடீரென கவிழ்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து கொண்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் நேற்றிரவு ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் மாநகரில் உள்ள பல்வேறு மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த சில மரங்கள் சாய்ந்தன. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரம் சாய்ந்ததில் கார் ஒன்று சேதமடைந்தது.



அதேபோல் ஆர்எஸ்புரம் பகுதியிலும் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரம் சாய்ந்ததில், மின் கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனிடயே அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்த நிலையில் மரத்தினை அப்புறப்படுத்துவதற்காக கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு இருந்தது. கிரைன் வாகனத்தின் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட போது எதிர்பாராத விதமாக கிரேன் வாகனம் சாய்ந்து விபத்திற்கு உள்ளானது. அப்போது, அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து அங்கிருந்து நகர்ந்துச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



தற்போது கிரேன் வாகனத்தை மேலும் 2 கிரேன்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...