பெண் ஆய்வாளர் மீது பொய் புகார் கொடுக்க வந்த பெண்கள் - எச்சரித்து அனுப்பிய கோவை சரக டிஐஜி!

கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பெண் ஆய்வாளர் ஒருவர் மீது பொய் புகார் அளிக்க வந்த 2 பெண்களை டிஐஜி விஜயகுமார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து டிஐஜி விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.


கோவை: கோவை ரெட் பீல்ட் பகுதியில் உள்ள கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் புகார் அளிக்க வந்தனர்.

அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...