துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பகுதிக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



துடியலூர் பகுதிக்கழக திமுக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1வது வட்ட செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், குமார், ஐ.டி. பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் சதீஸ்குமார், சோமசுந்தரம், தன்ராஜ், சம்பத்குமார், அருண்குமார், 2, 13, 14, 15 வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், சுந்தரம், சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழகப் பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திமுக 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1வது மாமன்ற உறுப்பினர் கற்பகம், 2வது மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, மதிமுகவை சேர்ந்த 14வது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், 1, 2, 13, 14, 15 வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...