போக்குவரத்து ஊழியர்களுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குக..! - திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளம் தீர்மானம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான சம்பளம், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டு தோறும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு பின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பென்ஷன், அகவிலைப்படி,ஓய்வு கால பணப்பலன்களை பெற தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அதிலும் 8 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள்இதுவரை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் அளித்ததை நிறைவேற்றி தர வேண்டும்,மின்வாரிய அரசு ஊழியர்களுக்கு போன்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பென்ஷன், ஓய்வு கால பணப்பலன், ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...