கோவையில் மழைநீர் கூடுதல் வடிகால் அமைக்கும் திட்டம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் மழைநீர் வடிகால்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியில் மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படும் நிலை இருந்துவருகிறது.



இந்நிலையில்,அப்பகுதியில் கூடுதலாக மழை நீர் வடிகால் கட்டுவது, கழிவு நீர் தொட்டி அமைத்து அதிவேக மோட்டார் பொருத்தி கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தேவையான கட்டுமான பணிகளை உடனடியாக துவங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...