தீண்டாமை சுவற்றை அகற்ற கோரி திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: தீண்டாமை சுவரை அகற்ற கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டையங்கிணறு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது.

விற்பனை செய்யும் வீட்டு மனைகளை ஒட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மக்கள் வசிப்பதால் வீட்டு மனைகளை விற்பனை செய்ய முடியாது என எண்ணி அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி சுமார் 10 அடி உயரம் வரை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுவரை ஒட்டி சாக்கடை தண்ணீர் மற்றும் மரம் செடிகள் வைத்து அதற்கும் தண்ணீர் அதிகமாக ஊற்றி வருவதால், அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதி களிமண் பூமி என்பதால் தண்ணீரின் ஈரம் பட்டு 20க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் விட்டு இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தீண்டாமை சுவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...