போளுவாம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பழங்குடி பெண் சடலம் - பரபரப்பு!

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் வனத்துறை ரோந்து பணியின் போது, இறந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஜவ்வுக்காடு பகுதியை பழங்குடியின பெண் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.


கோவை: போளுவாம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் பழங்குடி பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட தண்ணீர் பந்தல் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இறந்து அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் யானை தாக்கி உயிரிழந்த தடயங்கள் இல்லாததால் உடனடியாக அவர்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஜவ்வுக்காடு பழங்குடி கிராமத்தை சேர்ந்த பாப்பன் என்பவரது மனைவி காளியம்மாள் (56) என்பதும், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட காளியம்மாள் எதற்காக வனப்பகுதிக்கு வந்தார். கொலையா? என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...