போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க முயற்சி - மகன்கள் மீது மூதாட்டி புகார்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அங்காத்தாள் என்ற 96 வயது மூதாட்டி, தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகன்கள் மூன்று பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டு மகளுக்கு பாகம் தராமல் ஏமாற்றுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சொத்துக்களை போல ஆவணங்கள் மூலம் மகன்கள் அபகரிக்க முயல்வதாக 96 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அங்காத்தாள் (96). இவருக்கு துரைசாமி, லோகநாதன், கந்தர் மணி என்ற மூன்று மகன்கள் மற்றும் ஜெயலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளனர்.

இவரது கணவர் 16 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூன்று மகன்களும் தனித்தனியாக வசித்து வரக்கூடிய நிலையில் மகள் ஜெயலட்சுமி உடன் வசித்து வருகிறார்.



இந்த நிலையில் தற்போது தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று மகன்களும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு மகளுக்கு அதில் பாகம் தராமல் ஏமாற்ற முயற்சி நடப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது பெயரில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அழித்துவிட்டனர். மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று பேரும் எடுத்துக் கொள்ளும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மூவரிடமும் விசாரித்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் தனது புகாரை காவல்துறையின் நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கோள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...