போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க முயற்சி - மகன்கள் மீது மூதாட்டி புகார்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அங்காத்தாள் என்ற 96 வயது மூதாட்டி, தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகன்கள் மூன்று பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டு மகளுக்கு பாகம் தராமல் ஏமாற்றுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சொத்துக்களை போல ஆவணங்கள் மூலம் மகன்கள் அபகரிக்க முயல்வதாக 96 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அங்காத்தாள் (96). இவருக்கு துரைசாமி, லோகநாதன், கந்தர் மணி என்ற மூன்று மகன்கள் மற்றும் ஜெயலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளனர்.

இவரது கணவர் 16 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூன்று மகன்களும் தனித்தனியாக வசித்து வரக்கூடிய நிலையில் மகள் ஜெயலட்சுமி உடன் வசித்து வருகிறார்.



இந்த நிலையில் தற்போது தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று மகன்களும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு மகளுக்கு அதில் பாகம் தராமல் ஏமாற்ற முயற்சி நடப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது பெயரில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அழித்துவிட்டனர். மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று பேரும் எடுத்துக் கொள்ளும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மூவரிடமும் விசாரித்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் தனது புகாரை காவல்துறையின் நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கோள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...