போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க முயற்சி - மகன்கள் மீது மூதாட்டி புகார்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அங்காத்தாள் என்ற 96 வயது மூதாட்டி, தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகன்கள் மூன்று பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டு மகளுக்கு பாகம் தராமல் ஏமாற்றுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சொத்துக்களை போல ஆவணங்கள் மூலம் மகன்கள் அபகரிக்க முயல்வதாக 96 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அங்காத்தாள் (96). இவருக்கு துரைசாமி, லோகநாதன், கந்தர் மணி என்ற மூன்று மகன்கள் மற்றும் ஜெயலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளனர்.

இவரது கணவர் 16 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூன்று மகன்களும் தனித்தனியாக வசித்து வரக்கூடிய நிலையில் மகள் ஜெயலட்சுமி உடன் வசித்து வருகிறார்.



இந்த நிலையில் தற்போது தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று மகன்களும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு மகளுக்கு அதில் பாகம் தராமல் ஏமாற்ற முயற்சி நடப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது பெயரில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அழித்துவிட்டனர். மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று பேரும் எடுத்துக் கொள்ளும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மூவரிடமும் விசாரித்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் தனது புகாரை காவல்துறையின் நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கோள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...