வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெறும் சாலை பணி - அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

வால்பாறை - அதிரப்பள்ளி இடையேயான சாலையில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரை தார் சாலை அமைக்கும் பணிகள் முன்னறிவிப்பின்றி மீண்டும் தொடங்கப்பட்டதால் அரசு பேருந்து, இருசக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் நடுவழியில் முடிஸ் பகுதி அருகே நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


கோவை: வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெற்று வரும் சாலை பணிகள் காரணமாக அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்த தார் சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இந்த தார் சாலை அமைக்கும் பணி 14 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டது.

பணிகள் துவங்கி 4 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் சாலை பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் சாலையை பராமரிப்பு பணிக்காக தோண்டி போட்டு உள்ளதாலும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று முன்னறிவிப்பு இல்லாமல் நல்லமுடி பகுதியில் இருந்து முடிஸ் எஸ்டேட் வரை பிரிவு சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால். முடிஸ் பகுதியில் அரசு பேருந்து, இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவைகளை நிறுத்தி வைக்கப்பட்டது.



அதேபோல் வால்பாறையில் இருந்து வரும் அரசு பேருந்து சுற்றுலா வாகனங்கள், லாரி போன்ற வாகனங்களை நல்லமுடி பிரிவு பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் தார் சாலையை போடுவதால் இப்பிரச்சினை வருவதாகவும் இரவு நேரத்தில் தார் சாலை பணிகளை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...