வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெறும் சாலை பணி - அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

வால்பாறை - அதிரப்பள்ளி இடையேயான சாலையில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரை தார் சாலை அமைக்கும் பணிகள் முன்னறிவிப்பின்றி மீண்டும் தொடங்கப்பட்டதால் அரசு பேருந்து, இருசக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் நடுவழியில் முடிஸ் பகுதி அருகே நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


கோவை: வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெற்று வரும் சாலை பணிகள் காரணமாக அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்த தார் சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இந்த தார் சாலை அமைக்கும் பணி 14 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டது.

பணிகள் துவங்கி 4 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் சாலை பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் சாலையை பராமரிப்பு பணிக்காக தோண்டி போட்டு உள்ளதாலும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று முன்னறிவிப்பு இல்லாமல் நல்லமுடி பகுதியில் இருந்து முடிஸ் எஸ்டேட் வரை பிரிவு சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால். முடிஸ் பகுதியில் அரசு பேருந்து, இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவைகளை நிறுத்தி வைக்கப்பட்டது.



அதேபோல் வால்பாறையில் இருந்து வரும் அரசு பேருந்து சுற்றுலா வாகனங்கள், லாரி போன்ற வாகனங்களை நல்லமுடி பிரிவு பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் தார் சாலையை போடுவதால் இப்பிரச்சினை வருவதாகவும் இரவு நேரத்தில் தார் சாலை பணிகளை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...