தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு -  94.03 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வெழுதிய 8.03 லட்சம் பேரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வுகள் அனைத்தும் முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து,மாணவ-மாணவியரின் மதிப்பெண்கள் பாடவாரியாகப் பதிவேற்றப்பட்டு, முடிவுகளை வெளியிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.இதில், 8.03 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 7,55,451 லட்சம் மாணவ-மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதம் ஆகும். இவர்களில் மாணவியர் 4,05,753 (96.38%) பேரும், மாணவர்கள் 3,49,697 (91.45%) பேரும்மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர்.

இந்தாண்டும் வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், 97 சதவீதத் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...