வால்பாறையில் காட்டு யானைகள் 3வது நாளாக நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்றாவது நாளாக உலாவரும் காட்டு யானைகள் அங்குள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் உலாவரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், போன்றவைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதிகளில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் ஆகிய கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தியது. யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனிடையே வால்பாறைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, யானைகள் கோவிலை உடைத்ததை அறிந்து அப்பகுதிக்குவந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் வன பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது குறித்து சட்டசபையில்பேசி குடியிருப்பு பகுதிகளை சுற்றி மின் வேலி, அகழி போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்து சென்றார்.

யானைகள் நடமாட்டம்இருப்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...