வால்பாறையில் காட்டு யானைகள் 3வது நாளாக நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்றாவது நாளாக உலாவரும் காட்டு யானைகள் அங்குள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் உலாவரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், போன்றவைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதிகளில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் ஆகிய கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தியது. யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனிடையே வால்பாறைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, யானைகள் கோவிலை உடைத்ததை அறிந்து அப்பகுதிக்குவந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் வன பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது குறித்து சட்டசபையில்பேசி குடியிருப்பு பகுதிகளை சுற்றி மின் வேலி, அகழி போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்து சென்றார்.

யானைகள் நடமாட்டம்இருப்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...