வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை உடைத்த காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

தமிழக -கேரள எல்லையில் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கட்டப்பட்டிருந்த காப்பகத்தின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறை அருகே குழந்தைகள் காப்பகத்தை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடைகாலம் தொடங்கியதால் வால்பாறை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லை பகுதியையொட்டிய எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக-கேரள எல்லையையொட்டிய வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், முட்டைகள், சத்துமாவுகள் மற்றும் தின்பண்டங்களை தின்று சேதப்படுத்தியதோடு துதிக்கையால் வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது. பன்னிமேடு எஸ்டேட் தோட்ட அலுவலகத்தையும் உடைத்து அங்கிருந்த பொருட்களையும் வெளியே எடுத்து வீசியது.

மேலும் அலுவலகத்திற்கு முன்பு இருந்த மாரியம்மன் கோவில் கதவு, ஜன்னலை உடைத்து அலங்கார பொருட்களை வெளியே வீசி எறிந்தது. நீண்ட நேரமாக அங்கேயே யானைகள் சுற்றி திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மானாம் பள்ளி வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்தை குடியிருப்பு பகுதியிலிருந்து வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் கவனமாக இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...