மாட்டுக்கான போராட்டம் மண்ணுக்காகவும் தொடர்கிறது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு வேண்டி ஒட்டுமொத்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர். இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நெடுவாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக தற்போது இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, இளைஞர்களின் இந்த போராட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. 



இன்று காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மாட்டுக்காக வந்த நாங்கள், தமிழகத்தின் மண்ணை காக்கவும் வருவோம் என்றும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...