கோவையில் மூதாட்டியிடம் சுமார் ரூ.2.10 கோடி ஏமாற்றிய உறவினர்கள் கைது - சொத்துகளை பறிமுதல் செய்த போலீசார்!

கோவை மாவட்டம் இடிகரை அடுத்த ரங்கநாயகி என்ற மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிக்கத்தக்க பத்திரங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வங்கி கணக்கையும் முடக்கியுள்ளனர்.


கோவை: இடிகரை அருகே மூதாட்டியிடம் ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை போலீசார் கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடிகரை பகுதியை சேர்ந்த ராமராஜ் மனைவி ரங்கநாயகி (70), அவரது மகன் ராஜேஷ் வெளிநாட்டில் (நைஜீரியா) சொந்தமாக தொழில் செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து தனது தாயின் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது பணம் அனுப்பி வந்துள்ளார்.

இதனை ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன் (71), பாலகிருஷ்ணனின் மகள் கவிப்பிரியா (41) மற்றும் அவரது மருமகன் ஆனந்தகுமார் (49) ஆகியோர் ரங்கநாயகியை ஏமாற்றி சுமார் ரூ.8 கோடி பணத்தைப் பெற்று, அதை வைத்து ஆனந்தகுமார் தனது சொந்த தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அதில் ரூ. 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணம் சுமார் ரூ.2.10 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ரங்கநாயகியின் மகன் ராஜேஷ் இது தெரிந்து அவரது வங்கி கணக்குகளை பார்த்ததில் பாலகிருஷ்ணன், அவரது மகள் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தனது தாய் ரங்கநாயகியை ஏமாற்றியது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் கொடுத்துள்ளார். மேற்படி புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட புலன் விசாரணை மேற்கொண்டு மூதாட்டியிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய அவரது தம்பி பாலகிருஷ்ணன், அவரது மகள் கவிப்பிரியா மற்றும் மருமகன் ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி ரூபாய் மதிக்கத்தக்க பத்திரங்களும், ரூ.10 லட்சம் மதிக்கதக்க நான்கு சக்கரவாகனம்-1 மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1 கோடி ரூபாய் அளவிற்கான வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...