கோவையில் மூதாட்டியிடம் சுமார் ரூ.2.10 கோடி ஏமாற்றிய உறவினர்கள் கைது - சொத்துகளை பறிமுதல் செய்த போலீசார்!

கோவை மாவட்டம் இடிகரை அடுத்த ரங்கநாயகி என்ற மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிக்கத்தக்க பத்திரங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வங்கி கணக்கையும் முடக்கியுள்ளனர்.


கோவை: இடிகரை அருகே மூதாட்டியிடம் ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை போலீசார் கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடிகரை பகுதியை சேர்ந்த ராமராஜ் மனைவி ரங்கநாயகி (70), அவரது மகன் ராஜேஷ் வெளிநாட்டில் (நைஜீரியா) சொந்தமாக தொழில் செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து தனது தாயின் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது பணம் அனுப்பி வந்துள்ளார்.

இதனை ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன் (71), பாலகிருஷ்ணனின் மகள் கவிப்பிரியா (41) மற்றும் அவரது மருமகன் ஆனந்தகுமார் (49) ஆகியோர் ரங்கநாயகியை ஏமாற்றி சுமார் ரூ.8 கோடி பணத்தைப் பெற்று, அதை வைத்து ஆனந்தகுமார் தனது சொந்த தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அதில் ரூ. 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணம் சுமார் ரூ.2.10 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ரங்கநாயகியின் மகன் ராஜேஷ் இது தெரிந்து அவரது வங்கி கணக்குகளை பார்த்ததில் பாலகிருஷ்ணன், அவரது மகள் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தனது தாய் ரங்கநாயகியை ஏமாற்றியது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் கொடுத்துள்ளார். மேற்படி புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட புலன் விசாரணை மேற்கொண்டு மூதாட்டியிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய அவரது தம்பி பாலகிருஷ்ணன், அவரது மகள் கவிப்பிரியா மற்றும் மருமகன் ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி ரூபாய் மதிக்கத்தக்க பத்திரங்களும், ரூ.10 லட்சம் மதிக்கதக்க நான்கு சக்கரவாகனம்-1 மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1 கோடி ரூபாய் அளவிற்கான வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...