கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப் போட்டு ஒருவர் கொலை

கோவை போத்தனூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனோஜ்மேனன் என்ற ஓட்டுநரை கைது செய்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்மேனன். கார் ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.

இவர் நேற்று இரவு கட்டிட தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மனோஜ்மேனன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டத்தில் சித்தேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனோஜ்மேனன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சம்பவத்தை சொல்லி சரணடைத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...