நீலகிரியில் களைகட்டும் கோடை சீசன் - கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி தொடக்கம்!

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று 12-வது காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோ பஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப்பட்ட கம்பு செடி உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத் துறை, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.



இந்நிலையில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்த காய்கறி கண்காட்சியில் 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோபஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப் பட்ட கம்பு செடி உருவம், பூசணி காய்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன், கத்திரிக்காய்களால் உருவாக்கபட்ட 3 யானைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.



இதுதவிர, 31 காய்கறிகளால் உருவாக்கபட்ட பல்வேறு உருவங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தன.



மேலும், பல்வேறு மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட பாண்டா கரடி, பவானிசாகர் அணை, இருவாச்சி பறவை, ஒட்டக சிவிங்கி, வரையாடுகள், மயில், பாகற்காயால் உருவாக்கப்பட்ட முதலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...