திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி!

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன கட்டுமான சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலியானார்.

திருப்பூர் - கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(50), பிரவீன்(22) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.



இன்று மதியம் இருவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்த சுவர் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுவர் விழுந்து படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயமடைந்த பிரவீனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக சேர்த்தனர்.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், ராமமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...