கோவையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை நவக்கரை அருகே உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு செல்லும் பாலக்காடு சாலை நவக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமத் பைசல் (வயது18), கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் மற்றும் அபினந்த் (வயது21) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இருவரும் பெங்களூரில் இருந்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...