திருப்பூர் அருகே சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா - 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் அருகே நடைபெற்ற சித்திரகுப்தர் கோவில் திருவிழா நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நான்காயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் சின்ணாண்டிபாளையம் பகுதியில் ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கான தனிக்கோயில் தமிழகத்தில் 2 வது இடமாக இங்கு அமைந்துள்ளது.

கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.



அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.



இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...