திருப்பூர் அருகே சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா - 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் அருகே நடைபெற்ற சித்திரகுப்தர் கோவில் திருவிழா நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நான்காயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் சின்ணாண்டிபாளையம் பகுதியில் ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கான தனிக்கோயில் தமிழகத்தில் 2 வது இடமாக இங்கு அமைந்துள்ளது.

கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.



அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.



இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...