கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடித்த வழக்கு - மேலும் 2 பேர் கேரளாவில் கைது!

கோவை க.க.சாவடி அருகே கேரள நகை வியாபாரிகளான ரோகித் மற்றும் பரத் ஆகியோரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ரூ.4.லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரமோத், சுனில் என மேலும் இருவரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரோகித், மற்றும் பரத்.

தங்க நகை வியாபாரிகளான இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி 600 கிராம் தங்கத்தை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான நந்த கணேஷ், என்பவரிடம் விற்று விட்டு பணத்தை பெற்றனர். பின்னர் கோவையிலேயே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை, தங்களது இருசக்கர வாகனத்தில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே செல்லும்போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக பரத் க.க.சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (வயது28), ரஞ்சித்(வயது22) அபினேஸ்(வயது27), ரஞ்சித்குமார்(வயது32) ஆகிய நான்கு பேரை ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி கேரளாவில் முகாமிட்ட தனிப்படை போலீசார், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (வயது34), சுனில் (வயது46) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...