பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிமகன் போதையில் அட்டகாசம் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பேருந்துக்காக வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் தலைகால் தெரியாமல் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.



குடிபோதையில் இருந்த நபரை வீட்டுக்கு கிளம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிபோதையில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர். அதில் மயக்கமடைந்த நபரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பேருந்து நிலையத்திற்கு எதிரே குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...