பல்லடம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - இருவர் கைது!

பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்கு வந்த 2 போதை ஆசாமிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடை உரிமையாளர் வினோத்தை தாக்கியது மட்டுமல்லாமல் கடையையும் அடித்து சேதப்படுத்திய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையை அடித்து நொறுக்கி உரிமையாளரையும் தாக்கிய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் கடந்த நான்கு மாதங்களாக செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் இவரது கடைக்கு வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவர் மொபைலுக்கு சார்ஜ் போட தனது கைபேசியை கடையில் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து வினோத்தின் கடைக்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் வாய் பேச முடியாத பெண் குறித்து கேட்டுள்ளார்.



திடீரென அந்த பெண் குறித்து ஆபாச வார்த்தைகளில் பேசியபடி கடையில் இருந்த வினோத் மற்றும் அவரது தம்பி முத்து ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.



பின்னர், 10 நிமிடங்களில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் வினோத்தின் கடைக்கு வந்த அந்த நபர் வெளியே வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையை எடுத்து வினோத்தின் மீது சரமாரியாக தாக்கி கடையையும் அடித்து நொறுக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் வினோத் கையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, வினோத் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 நபர்களையும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பல்லடத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வடிவேல் மற்றும் பச்சாபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் ஆகிய இரண்டு பேரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கடை உரிமையாளர் வினோத் மீது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...