தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

துடியலூர் அடுத்த தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில் அருள்மிகு மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது.

தொடக்க விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய திருக்கோயில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மனுக்கு வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்றைய தினம் குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதில் அம்மனுக்கு வெண்ணைய் சாற்றி, உருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி, பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள், பூக்குண்டத்தில் முதலில் இறங்கினர்.



தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து பக்தர்களும் ஒருவர் பின் ஒருவராக பூ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...