தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

துடியலூர் அடுத்த தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில் அருள்மிகு மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது.

தொடக்க விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய திருக்கோயில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மனுக்கு வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்றைய தினம் குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதில் அம்மனுக்கு வெண்ணைய் சாற்றி, உருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி, பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள், பூக்குண்டத்தில் முதலில் இறங்கினர்.



தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து பக்தர்களும் ஒருவர் பின் ஒருவராக பூ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...