கனமழை, வெள்ளப்பெருக்கால் மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு - நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இங்கு மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


கோவை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலம் உடைந்து வெளியேறிய நீரில் சாலை முழுவதுமாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.



இதனை தொடர்ந்து தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால், மதுக்கரை - குரும்பபாளையம் இடையே செல்லும் தார் சாலை முழுமையாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும், மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால் தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடைவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



இந்நிலையில் மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்து செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...