கோவையில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - ஆட்சியர் வெளியிட்டார்!

கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இதனை வெளியிட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை பெற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.

கோவை மாவட்டத்திற்கு ஊரக பகுதியான மாவட்ட ஊராட்சியிலிருந்து 5 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியிலிருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது.

அதன்படி மாவட்ட ஊராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 மாநகராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100, 7 நகராட்சிகளில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 198, 33 பேரூராட்சிகளில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 513 ஆக மொத்தம் 825 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி நகராட்சியில் 2 காலியிடங்களும், தாளியூர் பேரூராட்சியில் ஒரு காலியிடம் என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. மேலும், 04.05.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...