பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் அடியோடு பெயர்ந்து விழுந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நோயாளிகள்!

பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்த 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டு பூவரசன் மரமானது நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக அடியோடு பெயர்ந்து விழுந்த நிலையில், நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெயர்ந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் இருந்த பூவரசன் மரம் அடியோடு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை இறக்கிவிட்டு விட்டு நுழைவு வாயில் அருகே நின்றது.



அப்போது, நுழைவு வாயிலில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான காட்டு பூவரசன் மரம் திடீரென அடியோடு பெயர்ந்து விழுந்தது.



மரம் பெயர்ந்து விழுந்த இடத்தில் நோயாளிகள் செவிலியர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் வேரோடு சாய்ந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் அரசு மருத்துவமனைக்குள் 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள நிலையில் பழமையான மரங்கள் பட்டு போய் வேரோடு சாயும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திடீரென பழமையான மரம் வேரோடு சாய்ந்த சம்பவம் பல்லடம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...