கோவையில் 17 வயது மகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது!

கோவையில் 2வது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கும், 2வது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அப்போது அவரது 17 வயது மகள் வளர்ப்பு தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததோடு, வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வளர்ப்பு தந்தை மீது சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...