கோவையில் 17 வயது மகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது!

கோவையில் 2வது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கும், 2வது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அப்போது அவரது 17 வயது மகள் வளர்ப்பு தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததோடு, வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வளர்ப்பு தந்தை மீது சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...