தாராபுரம் அருகே ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் - அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம்

மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் அலங்கியம் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...