உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலி - அச்சத்தில் மக்கள்!

உடுமலை அடுத்த படையாட்சி புதூரில் தங்கராசு என்பவரது தோட்டத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வனத்துறை குழு அமைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே 6 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கை வனத்துறை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி அடுத்த படையாட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தங்கராசு. இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள சாலை பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு கடித்து குதிறியதாக கூறப்படுகிறது. இதில், ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மர்ம விலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணித்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...