உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலி - அச்சத்தில் மக்கள்!

உடுமலை அடுத்த படையாட்சி புதூரில் தங்கராசு என்பவரது தோட்டத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வனத்துறை குழு அமைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே 6 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கை வனத்துறை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி அடுத்த படையாட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தங்கராசு. இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள சாலை பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு கடித்து குதிறியதாக கூறப்படுகிறது. இதில், ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மர்ம விலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணித்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...