உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலி - அச்சத்தில் மக்கள்!

உடுமலை அடுத்த படையாட்சி புதூரில் தங்கராசு என்பவரது தோட்டத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வனத்துறை குழு அமைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே 6 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கை வனத்துறை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி அடுத்த படையாட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தங்கராசு. இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள சாலை பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு கடித்து குதிறியதாக கூறப்படுகிறது. இதில், ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மர்ம விலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணித்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...