மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது நல்லது..! - அவைத்தலைவர் துரைசாமி யோசனை

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, மதிமுக பெருங்காய டப்பா போல காலியாகி விட்டது. எதிர்காலம் என்ற ஒன்று மதிமுகவிற்கு இல்லை, இளைஞர்கள் நலன் கருதி மதிமுகவை இப்போதே திமுகவில் இணைந்து விடுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மதிமுகவிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார்.

மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு ஐந்து முறை கடிதம் எழுதியும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை எனவும் மதிமுகவை திமுகவில் இணைத்து விடுங்கள் என கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று திருப்பூர் மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது,



மதிமுகவை உடைக்க யார் தூண்டுதலும் கிடையாது. மற்றவர்கள் சொல்லி எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி எங்கு இருக்கிறது அதனை உடைக்க.

மதிமுக பெருங்காய டப்பா போல காலியாக உள்ளது. மதிமுகவிற்கு எதிர்காலம் என்ற ஒன்று கிடையாது. கட்சியில் உள்ள இளைஞர்கள் நலன் கருதி இப்போதே திமுகவில் சேர்த்து விடுவது நல்லது. யார் சொல்வதை பற்றியும் எனக்கு கவலை இல்லை. தொழிற்சங்க சொத்துக்கு சண்டை என கூறுகின்றனர்.

தமிழகத்தில் திமுக சார்பில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கியது நான் தான். தொழிற்சங்கத்தை விதிமுறைகள் (பை லா) தான் கட்டுப்படுத்தும். அரசியல் கட்சிகள் இல்லை. சங்கத்தின் பொறுப்பாளர் பெயரில் சொத்துக்கள் இருக்குமே தவிர தனி நபர் பெயரில் இல்லை. ஒருவர் கையெழுத்து போட்டு எதையும் தூக்கி செல்ல முடியாது. விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர்.

தாயகம் கட்டிடம் மட்டும் வை.கோபாலசாமி என தனிப்பெயரில் வாங்கி உள்ளார். ஆனால் நாங்கள் பொதுச் செயலாளர், பொருளாளர் பெயரில் மட்டுமே வாங்கி உள்ளேன். கட்சி துவங்கிய நோக்கம் இன்று இல்லை. மதிமுக பலவீனமடைந்து உள்ளது. கிளை கழகம் அமைக்க 100 பேர் உறுப்பினர்களாக தேவை‌. ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனர்.

பெரியார், அண்ணா கொள்கைகளை வலியுறுத்தி போராடுவேன். திமுகவிற்கு ஆதரவு அளிப்பேன். கட்சியில் இணைய மாட்டேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என வைகோ சொல்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...