தாராபுரம் அருகே உறவினர் வீட்டில் பாத்திரங்கள் திருட்டு - இளைஞர் உட்பட 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரங்களைத் திருடிய இளங்கோ என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒரு நபரான முத்துக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரத்தை திருடி சென்ற வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராமாத்தாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தோட்ட வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்த ராமாத்தாள், கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேல் கூரையில் ஓடு பிரித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை பார்த்தபோது, விலை உயர்ந்த பாத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துசாமி மகன் இளங்கோ (வயது 22) , என்பவர், தனது நண்பர் முத்துகுமார் (வயது35) என்பவருடன் சேர்ந்து ராமாத்தாள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து இறங்கி இருவரும் பாத்திரங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...