கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை மீட்பு - இறப்பிற்கான காரணத்தை அறிய இன்று உடற்கூறாய்வு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெண் யானை இறந்து நிலையில் மீட்கப்பட்டது. அந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் இன்று உடற்கூறாய்வு செய்கின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, மாங்குழி சுற்று, பெருக்குபதி சராகம், தடாகம் காப்புக்காட்டிற்குள்,

பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின்போது வயது வந்த ஒரு பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.

அதில் யானையின் உடலில் காயங்களோ, வேறு அசாதாரண தடயங்களோ ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...