கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை மீட்பு - இறப்பிற்கான காரணத்தை அறிய இன்று உடற்கூறாய்வு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெண் யானை இறந்து நிலையில் மீட்கப்பட்டது. அந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் இன்று உடற்கூறாய்வு செய்கின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, மாங்குழி சுற்று, பெருக்குபதி சராகம், தடாகம் காப்புக்காட்டிற்குள்,

பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின்போது வயது வந்த ஒரு பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.

அதில் யானையின் உடலில் காயங்களோ, வேறு அசாதாரண தடயங்களோ ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...