பொள்ளாச்சியில் ஓவியப் போட்டி -மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கிலும், இயற்கை விவசாயம், நீர் வளம் காப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஓவியப்போட்டி நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து LKG முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூக்கள்-பழங்கள் பூக்கூடை, பூ ஜாடி, பழக்கூடை, நீர் வளம் காப்போம், இயற்கையை போற்றுவோம், எனது கிராமம் என்ற நான்குதலைப்புகளில் நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.



தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...