கோவையில் அருந்ததியர் மக்கள் மீது சாதிய ஆதிக்க சக்தியினர் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம்


கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள அருந்ததியர் காலனி மக்கள் மீது சாதிய ஆதிக்க சக்தியினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் இரு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த தடாகம் வரப்பாளையம் அருந்ததியர் காலனி அருகே நேற்று இரவு ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். அவர்களை அருந்ததியர் காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் கண்டித்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிறிது நேரத்தில், இளைஞர்கள் ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சாதிய ஆதிக்க சக்தியினர் உருட்டுக்கட்டைகளுடன் அருந்ததியர் காலனிக்குள் நுழைந்து அங்கிருந்த அருந்ததியர் சமூக மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில், அருந்ததியர் காலனியை சேர்ந்த கிட்டான், அஜீத்குமார், ராதாமணி, பூங்கொடி, பன்னீர் செல்வம், கனகராஜ், கருப்பசாமி, சரவணகுமார் ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த 8 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் துடியலூர் காவல் துறையினர் மெத்தன போக்குடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு பிரிவை சேர்ந்த 10 பேரை பிடித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...