தாராபுரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டன்பாளையம் கிராமத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டன் பாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...