தாராபுரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சின்னியகவுண்டன்பாளையம் கிராமத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டன் பாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...