உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் தீப்பிடித்ததில் பெண் பலியான சோகம்!

உடுமலை அடுத்த போடிபட்டி பகுதியில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வெஜினா (37) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் -வெஜினா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெஜினா சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஸ்டவ் தடுமாறி கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் தீ வெஜினா மீது பற்றிய நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே தீக்காயங்களுடன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெஜினா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...