அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை - கோவையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.



கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த உறுப்பினரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்கும் நிகழ்வுக்கும், இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு, திமுக தொண்டர்கள் புத்தகங்கள் வழங்கியும் பொன்னாடைகள் வழங்கியும் உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர்.



தொண்டர்களின் அன்பளிப்புகளை பெற்றுக் கொண்ட அவர், பின்னர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார்.

இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஈரோட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இன்று இரவு அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...