துரை வைகோவுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை..! - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி அதிரடி

மதிமுகவை திமுகவுடன் இணைப்பது குறித்து வைகோவுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஒரு சில தினங்களில் பதில் வராவிட்டால், அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



திருப்பூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து, சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது. என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் உள்ள மதிமுக அவை தலைவர் துரைசாமி இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர்.



அப்போது, துரைசாமி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துரைசாமி, திமுகவிலிருந்து மதிமுக பிரிந்து வந்தபோது மதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள வைகோ, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அவரது பேச்சை நம்பி 30 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.

தற்போது புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் உட்கட்சி தேர்தலில் துரை வைகோவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் துரை வைகோ சிலரின் தூண்டுதலின் பெயரில் அவைத்தலைவர் துரைசாமி இது போன்று கருத்து தெரிவித்து வருவதாகக் கூறியது தொடர்பான கேள்விக்கு, துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்த துரைசாமி, அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவிற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவரின் கருத்துக்குதான் பதில் சொல்வேன் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.‌

தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் துரைசாமி, இன்னும் ஒரு சில தினங்களில் வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...