கோவையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி,தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.



தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பயிர் பாதுகாப்புத்துறை சார்பில் தென்னை வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமாகவும் மற்றும் வனவியல் துறை சார்பில் காட்டு பன்றியினால் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை தடுக்கும் முறைகளும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தென்னை வாடல் நோய் சம்பந்தமாகவும் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாகவும், கொப்பரை கொள்முதல் சம்பந்தமாகவும், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், மேற்கு சித்திரை சாவடி பாசன மதகுகளை சரி செய்யவும், நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்கவும். கொப்பரை கொள்முதல் விலையை அதிகப்படுத்தவும், கனிமவள கடத்தலை தடுக்கவும். குளப்பத்துகுளம் பாசன சபை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மலர், காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தனி மார்க்கெட் அமைத்து தரவும், அங்கக உர மேலாண்மையை மேம்படுத்தவும், வாழை பயிருக்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள்கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...