வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 21மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு சத்து மாத்திரையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட ஒரு சில மாணவர்களுக்கு மாலை 3 மணி அளவில் லேசான தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு உள்ளது.



இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனம் மூலம் 21 குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சில தினங்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...