'பள்ளி மாணவர்களின் மனதை அமைதி படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்', அமைச்சர் செங்கோட்டையன்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பிரதமர்  நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், அவர் வந்த பின்னரே இது குறித்து பேச முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்விற்கு விலக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஓப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும் குடியரசு தலைவர் ஓப்புதல் கிடைக்கும்' என நம்புவதாகவும் கூறினார்.

'தங்களுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது எனவும் சட்டமன்றத்தில் பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்விற்கு கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பது பாதிப்பு என்ற கருத்து குறித்து பரீசிலனை செய்யப்படும் என கூறிய அமைச்சர்,
பள்ளி மாணவர்களின் மனதை அமைதி படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும் முதல்வரின் அனுமதி பெற்று அதனை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமரிடம் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது எனவும் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என கூற ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை எனவும் கூறியதுடன் ஜெயலலிதாவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் நீதிமன்ற உத்திரவுப்படி சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...